சமூக இடைவெளி மற்றும் பிற விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அந்த பகுதிகளுக்கு சீல் வைக்கப்படும். மேலும் தளர்வுகள் ரத்து செய்யப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் நேற்று வரை 42,836 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை 1389 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 11,762 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசு மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீடித்து சில தளர்வுகளை அறிவித்தது. இதை தொடர்ந்து டெல்லியில் முன்பு இருந்த ஊரடங்கை விட நேற்று சில தளர்வுகளுடன் வேலைகள் மேற்கொள்ளவும், கடைகள் திறக்கவும் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்தார்.
அதன் படி நேற்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. மதுபானக் கடைகள் திறந்ததால் மதுபான பிரியர்கள் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறினர்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து கூறுகையில், சமூக இடைவெளி மற்றும் பிற விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அந்த பகுதிகளுக்கு சீல் வைக்கப்படும். மேலும் தளர்வுகள் ரத்து செய்யப்படும் என கூறினார். நாம் அனைவரும் பொறுப்புள்ள குடிமக்களைப் போல நடந்து கொள்ளவும். கொரோனா வைரஸை தோற்கடிக்க முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றவும் என்று அவர் கூறினார்.
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…