நீர்விழ்ச்சியில் செல்ஃபி எடுக்க சென்ற மாணவன் பிணமாக மீட்பு..!

ஒடிசாவில் தியோகரில் ஒரு செல்ஃபி கிளிக் செய்யும் போது 23 வயது மருத்துவ மாணவர் நீர்வீழ்ச்சியில் இறந்துள்ளார்.

ஒடிசாவில் தியோகரில் சேர்ந்தவர் சுபபிரசாத்  இவர் உத்தரபிரதேசத்தில் உள்ளபிரயாகராஜில் எம்.பி.பி.எஸ் படித்து வந்தார்,  இந்நிலையில் பிரசாத் கடந்த வியாழக்கிழமை காலை நடைப்பயணத்திற்கு நீர்விழ்ச்சி பகுதிக்கு சென்றுள்ளார் , அப்பொழுது செல்ஃபி எடுக்க நீர்வீழ்ச்சியின் மேல் நீர்ப்பிடிப்புக்குச் சென்றார்.

நீர்விழ்ச்சிக்கு சென்று தனது நண்பர் ஒருவருக்கு வீடியோ கால் மூலம் அழைத்த பிறகு, அழகான இருப்பிடத்தைக் பிரசாத் தனது நண்பர்களுக்கு காண்பித்துள்ளார் , மேலும் வீடியோ கால் அழைப்புக்குப் பிறகு, அவர் தண்ணீரில் இருந்து நழுவி நீரில் மூழ்கிவிட்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சுபபிரசாத் உடல் நேற்று வெள்ளிக்கிழமை காலை நீர்வீழ்ச்சியில் இருந்து போலீசார் மீட்டனர் மேலும் உடலை கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர், அதன் பிறகு போலீசார் கூறியது செல்ஃபி எடுக்கும்போது நீர்வீழ்ச்சியில் விழுந்ததாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.