இறுதி செமஸ்டர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கான மறுதேர்வு தேதி அறிவிப்பு.!

இறுதி செமஸ்டர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கான மறுதேர்வு நவம்பர் 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக இறுதியாண்டு பயிலும் மாணவர்களை தவிர மற்ற ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது .

அந்த தேர்வை பல மாணவர்களால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக எழுத இயலாமல் போனது . அந்த மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது  .அதன்படி மறுதேர்வு நடைபெறும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதாதவர்களுக்கான மறுதேர்வு நவம்பர் 17- ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.