Rashmika Animal sad [file image]
ராஷ்மிகா மந்தனா : நடிகை ராஷ்மிகா மந்தனா சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க எப்போதும் தயங்கியது இல்லை என்றே கூறலாம். அடிக்கடி, சமூக வலைத்தளங்களில் தன்னிடம் கேள்வி கேட்க கூறி அதற்கு பதில் அளித்து வருவார். அப்படி இல்லை என்றால் சமூக வலைத்தளங்களில் தான் பதில் அளிக்கும் வகையில் எதையாவது பார்த்தால் உடனடியாக பதில் அளித்து விடுவார்.
அப்படி தான் இப்போது அனிமல் படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்ட ரசிகர் ஒருவருக்கு பதில் அளித்து இருக்கிறார். ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அனிமல் படத்தில் இடம்பெற்ற ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா இருவரும் பேசும் வீடியோவையும், படத்தில் ராஷ்மிகாவுக்கு பிறகு ரன்பீர் கபூருக்கு ட்ரிப்டி டிம்ரி நடித்த ஜோயா கதாபாத்திரத்தின் மீது பழக்கம் ஏற்படும் வீடியோவையும் சேர்த்து எடிட் செய்து வெளியீட்டு ‘ஒரு மனிதனை நம்புவதை விட பயங்கரமானது எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா ” திருத்தம் ஒரு முட்டாள் மனிதனை நம்புவது = பயமாக இருக்கிறது.. அங்கேயும் நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.. அந்த மனிதர்களை நம்புவது =சிறப்பு” என கூறி பதில் அளித்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மேலும், நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி :மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடைபெற்று வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த…
ஹர்திக் பாண்டியா : இந்தியா அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பிரம்மாண்ட வரவேற்புடன் கூடிய பாராட்டு விழாவானது இன்னும் சற்று நேரத்தில் தொடங்க…
தமிழ்நாடு : நாமக்கல் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று தனியார் பேருந்து ஒன்று வேகமாகவும் சீராகவும் சென்று கொண்டிருக்கையில், கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்து ஒரு வளைவு ஒன்றில்…
பீகார்: சரண் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் குறுக்கே பயன்பாட்டில் இருந்த ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பீகார் மாநிலத்தில் சமீப நாட்களாக பாலங்கள் இடிந்து விழுவது…
Dry fish- கருவாடு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள், எவற்றோடு சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ உணவுகளில் கொழுப்பு குறைவாக…
சிவகங்கை : மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் துணை சுகாதார நிலையம் நலவாழ்வு மையம், நகர் நலவாழ்வு மையம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார…