ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெல்லட் தலைமைலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கியதால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் பாஜ எம்எல்ஏ வினோதமாக வந்து அரசிற்க்கு கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த பிகானெர் தொகுதி பாஜ எம்எல்ஏ பிகாரிலால் , ‘‘வெட்டுக்கிளி தாக்குதல் காரணமாக ராஜஸ்தானில் ஏராளமான விவசாயிகள் பாதித்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணத் தொகையை அரசு விரைவாக வழங்க வேண்டும். இதை வலியுறுத்தியே வெட்டுக்கிளி நிரம்பிய கூடையுடன் வந்துள்ளேன்,’’ என்றார். இது குறித்து கருத்து தெரிவித்த வேளாண் துறை அதிகாரிகள், ராஜஸ்தான் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்குவதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு வெட்டுக்கிளிகள் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. சுமார் `3.70 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கியுள்ளது. சேதமடைந்துள்ள பகுதிகளில் வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்தார்.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…