அடுத்த 2 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டத்திற்கு மழை.!

Weather Update: அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில்  7 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி என மொத்தம் 7 மாவட்ட பட்டியலை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

தற்பொழுது, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இன்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.