Categories: இந்தியா

100 நாட்களில் நாடுமுழுவதும் உள்ள 2,568 ரயில்வே கேட்டுகளை மூட ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு !

இந்திய ரயில்வே கேட்டுக்களை அகற்றும் மத்திய அரசின் முடிவை கேட் கீப்பர் மட்டும் என்ஜினீயரிங் தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றனர்.
இந்திய ரயில்வே தனியார் மயமாக்கும் பணியை 100 நாள்களில் செயல்ப்படுத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. இந்த 100 நாட்களில் ரயில் தனியார் மயம் ,ஊழியர் குறைப்பு ,ஆகிய திட்டங்களை செயல்படுத்த உள்ளனர்.இந்த திட்டத்தில் ரயில்வே கேட்டுகளை முற்றிலும் நீக்குவதாக கூறப்பட்டு உள்ளது.

இதனால் கேட் கீப்பர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஒரு புறம் ஆல் இல்லாத  ரயில்வே கேட்டுகளில் கேட் மித்ராக்கள் என கூறப்படும் தனி நபரை வேலையில் அமர்த்தி வருகின்றனர்.
ஆனால் கேட் கீப்பர் உள்ள  ரயில்வே  கேட்டுகளை ரயில்வே அமைச்சகம் மூட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.ரயில்வே மேம்பாலம் ,சுரங்கப்பாதை கட்டுவதால் கேட் கீப்பர் தேவை இல்லை என கூறுகின்றனர்.
இந்நிலையில் 100 நாட்களில் நாடுமுழுவதும் உள்ள 2,568 கேட்டுகளை மூட உள்ளதாக அறிவித்து உள்ளனர்.ரயில்வே என்ஜினீயரிங் பிரிவில் ரயில்வே பராமரிப்பு பணி தொடர்புடைய கேட் கீப்பர் ,டிராக் மேன் ஆகிய 7 பணியிடங்கள் உள்ளது.

ரயில்வே அமைச்சகம் அறிவிப்பால் இவர்கள் அனைவரும் தங்களது பணியை இழக்க வாய்ப்பு உள்ளது.மதுரை ரயில்வே கோட்டத்தில் என்ஜினீயரிங் பிரிவில் தண்டவாள பராமரிப்பு பணியில் கடந்த 1990-ம் ஆண்டு 6,700 பணியாளர்கள் வேலை செய்து வந்தனர்.ஆனால் தற்போது 2,935 பணியாளர்கள் மட்டுமே வேலை செய்து வருகின்றனர்.
அன்று இயக்கப்பட்ட ரயில்களின் எண்ணிக்கையை விட இன்று ரயில்களின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்து உள்ளது. அன்றைய காட்டியும் இன்று இரட்டிப்பாக வேண்டிய பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைந்து உள்ளது.

இந்நிலையில்  தற்போது இருக்கின்ற அந்த குறைந்த  பணியாளர்களையும் வேலையை  இழக்கும் நிலைமை வந்து உள்ளது.ஆகவே இந்த திட்டத்திற்கு என்ஜினீயரிங் பிரிவு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

murugan

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

1 hour ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

2 hours ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

2 hours ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

2 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

3 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

3 hours ago