Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2. இந்த திரைப்படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். இந்த புஷ்பா 2 திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீதேஜ், திவி வத்யா, ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கான முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட்டானது. குறிப்பாக படம் உலகம் முழுவது 375 கோடி வரை வசூல் செய்து இருந்தது. முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்றுள்ள காரணத்தால் இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த இரண்டாவது பாகம் மட்டும் கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட இந்த படத்தில் இருந்து வெளியான டீசர் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதற்கிடையில், படம் திரையரங்கில் வெளியான பிறகு ஓடிடியில் வெளியாவதற்கான உரிமையை எந்த நிறுவனம் எவ்வளவு கோடி வாங்கியுள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி புஷ்பா 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. கிட்டத்தட்ட எல்லா மொழிகளையும் சேர்த்து 275 கோடிகளுக்கு வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே இத்தனை கோடிக்கு ஓடிடியில் விற்பனையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், புஷ்பா 2 திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…