ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டம்.. 83 பேர் பலி!

ஈரானில் மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 83 பேர் கொல்லப்பட்டனர்.

ஹிஜாப் முறையாக அணியாததாகக் கூறி மஹ்சா அமினி(22) என்ற இளம் பெண் காவல் துறை விசாரணையில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார். இதனால் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்து.

தற்போது வரை தொடர்ந்து வரும் இந்த போராட்டங்களில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டதாக, நார்வேயை தலைமை இடமாக கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு நேற்று(செப் 29) தெரிவித்தது.

மேலும், கலவரத்தில் ஈடுபட்ட ஏராளமான போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
Varathalakshmi

Leave a Comment