அணுக்கழிவு மையம்: “பிரதமர் மோடியின் பதில் அதிர்ச்சியளிக்கிறது!”- எம்.பி. சு.வெங்கடேசன்

அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை என்பதை மத்திய அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளதாக எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான ஆழ்நில அணுக்கழிவு மையம் இப்போதைக்கு தேவை இல்லை என பிரதமர் மோடி கூறிய நிலையில், அணுசக்தி கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிலநுட்பம், இந்தியாவில் இல்லை என்பதை மத்திய அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளதாக எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர், அணுசக்தி கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் இப்போதைக்கு இல்லை என்பதை மத்திய அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அணுசக்தி துறைக்கு பொறுப்பு வகிக்கும் பிரதமர் மோடி, இந்தியாவில் ஆழ்நில அணுக்கழிவு மையம் இப்போதைக்கு தேவை இல்லை என்றும், கூடங்குளம் குறித்து பிரதமர் மோடி பதில் அளித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.