தலைவர் அண்ணன், துணைப் பொதுச் செயலாளர் தங்கை – தமிழிசை

ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமமான காரியம்தான் என ஆளுநர்  தமிழிசை தெரிவித்துள்ளார். 

திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள்  கூறுகையில்,ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமமான காரியம்தான். இத்தகைய சூழலில் கனிமொழி பதவிக்கு வந்துள்ளார்.’வாரிசு அரசியல்’ என்று அடையாளமாகிப் போய்விடுமோ என சந்தேகம் வருகிறது.

காரணம் தலைவர் அண்ணன், துணைப் பொதுச் செயலாளர் தங்கை. அது பல தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. இது என்னுடைய கருத்தல்ல. பலர் இப்படி நினைக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் ஒரு பெண், ஒரு பதவிக்கு வந்ததற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment