பேய் ஓட்டுவதாக கூறி தூக்கமாத்திரை கொடுத்து கர்ப்பமாக்கிய பூசாரியை சரமாரியாக தாக்கிய மக்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் ஆதிலாபாத் எனும் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் 15 வயது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி மந்திரவாதியை அணுக வேண்டும் என்ற காரணத்திற்காக அம்மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் எனும் மாவட்டத்தில் பூசல காலனி பகுதியை சேர்ந்த பிரசாத் எனும் 42 வயதுடைய மந்திரவாதியிடம் சென்றுள்ளனர். அங்கு இவர் கடந்த சில வருடங்களாக பூஜை செய்து பேய் ஓட்டுவது, தீராத நோய்களை தீர்ப்பது போன்ற தன்னுடைய வித்தைகளை மக்களிடம் கூறி மக்களை ஏமாற்றி வந்துள்ளார். பலர் நம்பி அவரிடம் பூஜைக்கும் சென்று உள்ளனர். இந்நிலையில் 15 வயது மகளுக்கு பேய் பிடித்திருந்த தம்பதியினரும் அவரிடம் சென்றுள்ளனர். அவர் மூன்று மாதங்கள் பூஜை செய்து வந்தால் பேயை ஒரேடியாக விரட்டி விடலாம் என கூறியதை நம்பி அவர்களும் சம்மதம் தெரிவித்து தினமும் சிறுமியை மந்திரவாதியிடம் கூட்டி சென்றனர்.
அங்கு பூஜை செய்கிறார் என நம்பி தனியறையில் சிறுமியை விட்டு பூஜை முடிய சிறுமியை அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சிறுமிக்கு மிகுந்த உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது சிறுமி கர்ப்பமாக இருப்பதை தெரிந்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து கேட்டபோது மந்திரவாதி தினமும் தனக்கு தூக்க மாத்திரை கொடுத்து தன்னை பலாத்காரம் செய்வார் எனவும், ஆனால் அதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் போலி மந்திரவாதி பிரசாதை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியதோடு செருப்பு மற்றும் கற்களாலும் அடித்துள்ளனர். இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மந்திரவாதி பிரசாத்தை மீட்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…