கோவா துணை முதல்வரின் கைபேசியில் இருந்து பகிரப்பட்ட ஆபாச வீடியோ.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே இணையதளம் அடிமையாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், கோவாவின் துணை முதல்வரான சந்த்ரகாந்த் காவ்லேக்கரின் போனில் இருந்து, நேற்று அதிகாலை 1:20 மணியளவில், ‘VILLAGES OF GOA’ என்ற வாட்சப் குரூப்பில் ஒரு ஆபாச வீடியோ பகிரப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அரசியல் ரீதியாக இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவா முன்னணி கட்சியின் மகிளா பிரிவினர், மகளிர் காவல் நிலையத்தில் துணை முதல்வர் மீது புகார் கொடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு வற்புறுத்தி உள்ளனர்.
இதனையடுத்து, துணை முதல்வர் சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ள நிலையில், இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இது ஹேக்கர்களின் வேலை. அந்த வீடியோ பகிரப்பட்டுள்ள வாட்சப் குழுவில் நானும் உறுப்பினராக உள்ளேன். விஷமிகள் சிலர், என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இவ்வாறு செய்துள்ளனர். அந்த வீடியோ பகிரப்பட்ட நேரத்தில், நான் எனது போனை உபயோகப்படுத்தவே இல்லை. அப்போது நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தொடர்புடைய அனைவரையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…