கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக இயக்கி இருந்தார். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்களேன்- கிழிந்திருக்கும் உடையில் பயங்கர கவர்ச்சி.! வீடியோ வெளியீட்டு விருந்து வைத்த மாளவிகா.!
அந்த வகையில், தற்போது படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் டிவிட்டரில் பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியீட்டு ஏதோ விசேஷம் அடிவானத்தில் இருக்கிறது. என்னவென்று உங்களால் யூகிக்க முடிகிறதா? என பதிவிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை பார்த்த பலரும் படத்தின் ஒரிஜன் சவுண்ட் ட்ராக் (OST) நாளை வெளியாகிறது எனவும், பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஆனால், இந்த அறிவிப்பை பார்க்கையில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் தேதி தான் என சினிமா வட்டாரத்தில் கூறி வருகிறார்கள். ஏற்கனவே தமிழ் சினிமாவில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை இந்த படம் தான் படைத்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகவுள்ளதால், பெரிய சாதனை படைக்கும் என தெரிகிறது. மேலும் , நாளை இந்த படத்திலிருந்து என்ன அப்டேட் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…
சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…
Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…