நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு!

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பினை அறிவிக்கவுள்ள நிலையில் போயஸ் கார்டனில் உள்ள அவரின் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும், அதுதொடர்பான விபரங்கள் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகும் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், ரஜினி கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை அறிவிக்கவுள்ள நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு 12 பேர் கொண்ட போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.