#BREAKING: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு.!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை வித்துள்ளது.

நாளை மறுநாள் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வழக்கமாக அதனை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி மதுபான பார்களை நாளை இரவு 10 மணியுடன் மூட காவல்துறை உத்தரவுவிட்டுள்ளது. அந்த வகையில், மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.