நிர்வாணமாக போட்டோஷூட்… ரன்வீர் சிங் மீது காவல் நிலையத்தில் புகார்.!

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரும், நடிகை தீபிகா படுகோனின் கணவருமானவர் நடிகர் ரன்வீர் சிங். எந்த ஒரு விஷியத்தை செய்தலும் மிகவும் தைரியமாக செய்யக்கூடிய இவர் வித்தியாசமான உடைகளை அணிந்து புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியீடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைவர்க்கும் அதிர்ச்சி தரும் விதமாக ,அட்டைப்படத்திற்காக அரை நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சை ஆகியுள்ள நிலையில், இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நிர்வாணமான புகைப்படங்களை ரன்வீர் சிங் மீது வெளியிட்டது தொடர்பாக மும்பையில் உள்ள செம்பூர் காவல் நிலையத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் கொடுத்த அந்த புகாரில் “ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்” என குறிப்பிட்டுள்ளது. இந்த புகாரை ஏற்ற போலீசார் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment