மோடி என்ற வீரன் ஒரு இரும்பு மனிதர்.. இவர் இல்லையென்றால் இந்தியா துண்டாடப்பட்டிருக்கும்.. என பால்வளம் பாராட்டு…

  • குடியுரிமை திருத்த விவகாரம் மோடியை புகழ்ந்த பால் வளம்.
  • மோடி என்ற வீரன் கையில் உள்ளதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த  சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசும்போது,  மோடி என்ற வீரன் கையில் உள்ளதால் தான் இந்தியா இந்தியாவாக உள்ளது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி போன்ற ஒரு இரும்பு மனிதர் இல்லையென்றால் வன்முறையால் இந்தியா துண்டாடப்பட்டிருக்கும் ‘ என்று தெரிவித்தார். இந்த செய்தி தற்போது இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Kaliraj