விராட் கோலி, ரோஹித் சர்மாவுடன் விளையாடுவது நான் செய்த அதிர்ஷ்டம்- தவான்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா ஆகியோருடன் விளையாடுவது நான் செய்த அதிர்ஷ்டம் என தவான் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்குபவர், ஷிகர் தவான். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் இவர், இந்திய அணி சார்பில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி சார்பாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியினர் ஆடை மாற்றும் அறையில் ஒவ்வொரு வீரர்களும் வித்தியாசமாக இருப்பதாகவும், அவர்களின் திறமை மற்றும் ஆற்றல்தான் இந்திய அணியின் வெற்றிக்கான பாதையாக அமைகிறது என இந்தியா டுடே தொலைக்காட்சியில் இந்திய அணியின் ஓபனர் ஷிகர் தவான் பேசினார்.

மேலும் பேசிய அவர், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருடன் விளையாடுவது நான் செய்த அதிர்ஷ்டம் என தவான் கூறினார். போட்டி தொடங்கம் நேரத்தை ரோஹித் சர்மா எடுத்துக்கொள்கிறார். அவர் மைதானத்திற்குள் சென்றால், அவரை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் வெளியேற்ற முடியாது. அதேசமயம் விராட் கோலியின் நிலைத்தன்மையும், அவரின் விளையாட்டு திறமையும் ஆச்சரியமாக இருப்பதாக அந்த நிகழ்ச்சியில் தவான் கூறினார்.