அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய்க்கு பிளாஸ்மா சிகிச்சை.!

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய் நிலை மோசமடைந்த பிறகு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய்க்கு கடந்த 26-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த , தருண் கோகய்க்கு நேற்று இரவு உடல்நிலை மோசமடைந்ததால் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், தற்போது அவரது உடல் நிலை இன்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்வீட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் மருத்துவமனையில் தருண் கோகய்  உடன் இருந்தேன், நாளை சட்டசபை இருப்பதால் வீட்டிற்கு திரும்பி வந்தேன். மருத்துவ குழுவுடன் எங்கள் குழு தொடர்பில் இருக்கிறது என தெரிவித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.