பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன்-2 திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பிச்சைக்காரன்-2 படத்தை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி தானே நடிகராகவும் நடித்து வருகிறார். இந்த படம்மே மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், படத்தை வெளியிடுவதற்குத் தடை கோரி சென்னை உயர்நிதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தனது ‘ஆய்வுக்கூடம்’ என்ற படத்தின் கதைதான் ‘பிச்சைக்காரன் 2’ என ராஜகணபதி என்பவர் வழக்கு தொடர்ந்து, நஷ்ட ஈடு கோரியிருந்தார்.

தற்போது, படத்திற்கு தடை மற்றும் ரூ.10 லட்சம் இழப்பீடு கோரிய ஆய்வுக்கூடம் படத்தின் தயாரிப்பாளர் ராஜகணபதி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் ராஜகணபதி தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து, பிச்சைக்காரன்-2 படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டுள்ளது.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது, ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.  முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது இந்த படத்தில் அவருடன் காவ்யா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.