பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது .
இதனிடையே கடந்த சில வாரங்களாகாவே பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியது.லிட்டருக்கு ரூ.85-ஐ தாண்டியுள்ள பெட்ரோல் விலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆனால் மத்திய அரசு அளித்த விளக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவாலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தது.
இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது .பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமருடனான ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படும் அறிவித்தார்.இந்த வரி குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவாதாவும் அறிவித்தார். மேலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையினை 1 ரூபாய் வரை குறைக்கும் என்றும் தெரிவித்தார்.
பெட்ரோலிய பொருட்கள் மீதான உற்பத்தி வரி ரூ.1.50 குறைக்கபடுவதால் சாமானிய மக்களுக்கு லிட்டருக்கு ரூ.5 வரை பலன் கிடைக்கும்.தற்போதைய பொருளாதார நிலையை அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது .ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவினால் நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை 2.50 ரூபாய் வரை குறைய உள்ளது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…