கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டுகள் கழித்து பூட்டப்பட்டது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அடுத்து தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்த நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து பாரம்பரிய சின்னங்களையும் மூடுமாறு தொல்லியல் துறைக்கு உத்தர ஒன்றினை பிறப்பித்துள்ளது.அதன்படி வரலாற்று நினைவு சின்னமாக விளங்கி வருகின்ற தஞ்சை பெரியகோவிலை மூடுமாறு தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வந்ததை அடுத்து தஞ்சை பெரியகோவில் நேற்று காலை 11 மணி முதல் மூடப்பட்டது.இந்நிலையில் நேற்று காலை நடைதிறந்த போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களோடு வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். சரியாக 11 மணிக்குப் பிறகு பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. அதன்படி வருகிற மார்ச்.,31ந்தேதி வரை தஞ்சை பெரிய கோவில் மூடப்படுவதாகவும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்கின்ற அறிவிப்பு பதாகையும் மராட்டா நுழைவுவாயிலில் உள்ள பூட்டப்பட்ட கேட்டில் வைக்கப்பட்டுள்ளது.கோவில் பூட்டப்பட்டாலும் சுவாமிக்கு வழக்கம் போல பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…
Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற…
Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…
Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…