முடங்குகிறதா தமிழகம் !தாகத்தில் தமிழகம் !தண்ணீரை தேடி அலையும் மக்கள்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு என்ற வள்ளுவனின் குறல் தமிழர்கள்  அனைவரும் அறிந்த ஒன்றே.அந்த வகையில் நீர் என்பது மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காரணி ஆகும்.நம் முன்னோர்கள் கூட அந்த காலத்தில் கூறுவார்கள்,உணவு இல்லாமல் கூட நாம் ஒரு சில தினங்கள் வாழ முடியும்,ஆனால்  தண்ணீர் மட்டும் இல்லை என்றால் மனிதன் ஒரு நாள் உயிர் கூட வாழ முடியாது என்று..
அந்த வகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் வறட்சி நிலவி வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மழைக்காலங்களில் மழைநீரை சேமித்து வைக்காததுதான்.ஆம் அதுவும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.மேலும் தமிழகத்தை வெளுத்து வாங்கிய அக்னி நட்சத்திரமும் ஒரு காரணம் ஆகும்.
இந்த வகையில் தென் மாவட்டங்களை காட்டிலும்  வட மாவட்டங்கள் வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் முக்கிய நீர் நிலைகளும் வறண்டு காணப்படுகிறது.இதன்விளைவாக ஓட்டல்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளது.
அன்றாட குடிநீருக்கு தண்ணீர் லாரிகளையே நம்பியுள்ளனர்  மக்கள்.ஆனால் தற்போது அந்த லாரிகளுக்கே தண்ணீர் நிரப்ப தண்ணீர் இல்லை.  உணவை சமைக்க கூட போதிய தண்ணீர் இல்லை என்று புலம்புகிறார்கள் சென்னையில் ஹோட்டல் வைத்துள்ளவர்கள்.இதனால் வாடிக்கையாளர்களிடம் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றது.ஒரு சிலர் தங்களது உணவகங்களை முடியும் வருகின்றனர்.

அதற்கு ஒரு படி மேலே ஐ.டி.நிறுவனங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவுரை வழங்கியுள்ளது.தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தலைநகர் சென்னையில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன.
மேலும் கால்நடைகளை வைத்துள்ளவர்களும் இதற்கு தப்ப வில்லை.தங்களது கால்நடைகளுக்கு உணவிற்கு பின் தண்ணீர் வைக்க சிரமப்பட்டு வருகின்றனர்.பல ஊர்களில் தண்ணீருக்காக பல மணிநேரங்கள் காத்திருந்தும் ,பல கிலோமீட்டர் தூரங்கள் நடந்து சென்று வாங்கி வருகின்றனர்.

Recent Posts

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

6 mins ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

12 mins ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

13 mins ago

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

25 mins ago

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை…

Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…

49 mins ago

‘ஐபில் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது’ ! போட்டிக்கு பின் ஜஸ்டின் லாங்கர் கூறியது என்ன ?

Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…

1 hour ago