பேனா சிலை நிறுவப்படும் இடம் எப்படிபட்ட இடம் என ஆய்வாளர்களிடம் கேட்டுள்ளேன். அவர்களின் ஆய்வு முடிவுகள் வெளியான உடன் நான் எனது கருத்தை கூறுகிறேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே 34 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட பேனா சிலையை நிறுவுவதற்கான வேலைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு கருத்து கேட்பு கூட்டம் கூட அண்மையில் சென்னை கலைவாணர் அரங்கில் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் நடத்தப்பட்டது.
பேனா சிலை அமைக்க ஆதரவும் , எதிரிப்பும் கலந்து வந்த வண்ணம் இருக்கிறது. இது பற்றி இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், பேனா சிலை நிறுவப்படும் இடம் எப்படிபட்ட இடம் என ஆய்வாளர்களிடம் கேட்டுள்ளேன். அதே போல, அந்த சிலை அமைந்தால், மீன் வளம் பாதிக்கப்படுமா என்பது பற்றியும் கேட்டுள்ளேன்.
மேலும், அந்த சிலை நிறுவப்பட்டால், சுற்றியுள்ள மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமா என்பது பற்றிய கருத்தையும் நான் கேட்டுளேன். மேலும், மீனவர்கள் சங்கங்களில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது பற்றியும் நான் கேட்டுள்ளேன். அவர்களின் நிலைப்பாடு தெரிந்ததும், எங்கள் தரப்பில் இருந்து அதிமுக நிலைப்பாட்டை அறிவிக்கிறேன் என செய்தியாளர்களிடம் கூறிவிட்டு சென்றார் ஓ.பன்னீர்செல்வம்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…