ஷாருக்கான் நடித்த ‘பதான்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று திரையரங்களில் வெளியானது. அதிரடி ஆக்சன் த்ரில்லர் படமான இந்த படத்தை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்தில் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதால் படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். படமும் அருமையாக இருப்பதால் படத்தை பார்த்த பலரும் சூப்பர்…கண்டிப்பாக பிளாக் பஸ்டர் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், படம் வெளியான முதல் நாளில் மட்டும் இந்தியாவில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 54 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
மேலும், உலகம் முழுவதும் பதான் திரைப்படம் வெளியான 1 நாளில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தி திரையுலகில் இது மிகப்பெரிய சாதனை என்றும் சொல்லப்படுகிறது. வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படத்திற்கான வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மேலும் படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…