ராகுல்காந்தி விவகாரம்.! நாடாளுமன்றம் இன்றும் முடக்கம்.!

எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 11வது நாளாக முடங்கியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2023: இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது, அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள், சபாநாயகர் ஓம் பிர்லா மேஜை மீது காகித துண்டுகளை வீசி அமளியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் அமளியாலும் மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தற்போது, ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து வந்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், மோடி என்ற குடும்பப் பெயர் குறித்து அவதூறாக பேசிய ராகுல் மன்னிப்பு கேட்கக் கோரி பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பினர். இந்நிலையில், இரு தரப்பு அமளியால் இரு அவையும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 11வது நாளாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியிலும், பட்ஜெட் விவாதமின்றி நிறைவேறியது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment