Categories: இந்தியா

குழந்தையோடு வந்த மகளை அடித்து கொன்ற பெற்றோர்!திடுக்கிடும் தகவல்!

ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் பாஸ்கர் நாயுடு வரலட்சுமி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர்.இவருக்கு ஹேமாவதி என்ற மகள் இருந்துள்ளார்.ஹேமாவதியை அவர் பெற்றோர் இருவரும் செல்லமாக வளர்த்துள்ளனர்.
திருமண வயது வந்தவுடன் ஹேமாவதிக்கு வேறு சாதியை சேர்ந்த கேசவலு மீது ஆசை ஏற்பட்டுள்ளது.கேசவலு தலித் சமூதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஹேமாவதியின் பெற்றோர் அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
அந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஊரை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொண்டனர்.மேலும் வெளியூரில் யாருக்கும் தெரியாமல் வசித்து வந்த இருவருக்கும் குழந்தை கரு உருவாகியுள்ளது.
குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் மனம் இறங்கிவிடுவார் என்றும் தமக்கு வளைகாப்பு செய்து வைப்பார் என்று ஹேமாவதி எண்ணியுள்ளார். இந்நிலையில் குழந்தை பிறக்கும் நாள் நெருங்கியுள்ளது.
ஹேமாவதியை பார்க்க ஆசைப்பட்ட அவரின் பெற்றோர் இருவரையும் சொந்த ஊருக்கு வரவழைத்துள்ளனர்.தங்களின் வீட்டில் இருந்த நிலையில் ஹேமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது ஹேமாவதி பிரசவத்திற்காக பலமனேரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்த விஷயம் ஹேமாவதியின் பெற்றோருக்கு தெரியவந்தவுடன் தங்களை அசிங்கபடுத்திய இருவரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளனர்.
நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஆட்டோவை திடீரென்று ஒரு கும்பல் வழிமறித்துள்ளது.அது யார் என்று ஹேமாவதி பார்த்த போது அவரின் தந்தையும் உறவினரும் நின்றுகொண்டிருந்துள்ளனர்.தம்மை அழைத்து செல்ல வந்துள்ளனர் என்று ஹேமாவதி நினைத்துள்ளார்.
ஆனால் அவர்கள் ஆட்டோவில் இருந்த இருவரையும் வெளியே இழுத்து போட்டு அடித்துள்ளனர்.பச்சை உடம்பு காரி என்று கூட மாறாமல் அடித்து கொன்று கால்வாயில் வீசி சென்றுள்ளனர்.பிஞ்சு குழந்தை என்று கூட பாராமல் வீசி எரிந்து சென்றுள்ளனர்.
காவல் துறையினருக்கு சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.இதை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு ஹேமாவதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்நிலையில் மகளுக்கு குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் அடித்து கொன்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

தூங்கிக்கொண்டு இருந்த வாட்ச்மேன்! கேட் ஏறி விஜயகாந்த் செஞ்ச விஷயம்?

Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும்…

22 mins ago

வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு வழக்கு… உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.!

VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில்…

29 mins ago

மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா.. காரணம் என்ன?

China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக…

47 mins ago

மீண்டும் ஏகிறியது தங்கம் விலை…சவரன் ரூ.360 உயர்வு.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…

1 hour ago

கில்லி படத்தில் ரஜினியை பார்த்து தான் விஜய் நடிச்சாரு! இயக்குனர் தரணி சொன்ன சீக்ரெட்!

Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல…

1 hour ago

இந்தியாவில் நடைபெற வாய்ப்பு அதிகம் !! இந்திய செஸ் சம்மேளனம் தகவல் !!

Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே…

1 hour ago