ஆயுதங்களுடன் இந்திய எல்லையில் பறந்த பாகிஸ்தான் உளவு ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படையினர்!

ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. மேலும், இந்திய எல்லையில் உள்ள கிராமங்களில் அவ்வப்போது தாக்குதல் நடந்தி வருகிறது. இந்த தாக்குல்களுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி குடுத்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லையை கடந்து வந்த ட்ரோன் ஒன்றை இந்திய சர்வதேச எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அந்த ட்ரான் ஜம்மு காஷ்மீர், கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரில் உள்ள ரதுவா பகுதியில் உள்ள ஒரு வயல்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. மேலும், அதனை கைப்பற்றி ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அப்பொழுது அதில் ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அதில் இருந்த ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றப்பட்டன.