Categories: Uncategory

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு ஸ்பாட் பிக்ஸிங்’கில் சிக்கியதால் ஒரு ஆண்டு தடை!

பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது ஷாஜியாப் ஹசன் கானுக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தடைவிதித்து   உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டு தடை பிறப்பிக்கப்படும் 3-வது கிரிக்கெட் வீரர் ஷாஜியாப் ஹசன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஷர்ஜீல் கான், காலித் லத்தீப் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி, கடந்த ஆண்டு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டி20 உலகக்கோப்பைப் போட்டியின் போது, பாகிஸ்தான் அணியில் முகம்மது ஷாஜியாப் ஹசன் கான் இடம் பெற்று இருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியில் முகம்மது ஷாஜியாப் ஹசன் கான் இடம்பெற்று விளையாடி வந்தார். அப்போது, இவர் ஸ்பாட் பிக்ஸிங்கில்  ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முகம்மது ஷாஜியாப் ஹசன் கான் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரிடம் விசாரணை செய்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். விசாரணை முடிந்தது.

இந்த வழக்கில் பாகிஸ்தான் ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் இன்று முகம்மது ஷாஜியாப் ஹசன் கானுக்கு ஒரு ஆண்டு தடையும், ரூ.10 லட்சம் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தது.

இது குறித்து முகம்மது ஷாஜியாப் ஹசன் கானின் வழக்கறிஞர் காஷிப் ராஜ்வானா லாகூரில் நிருபர்களிடம் கூறுகையில், ”முகம்மது ஷாஜியாப் ஹசன் கானுக்கு விதிக்கப்பட்ட தடை என்பது கடந்த ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். அந்தத் தடைக்காலம் வரும் மார்ச் 17-ம் தேதியோடு முடிந்துவிடும். அதன்பின் மேல்முறையீடு செய்வோம்” எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சட்ட ஆலோசகர் தாபாசுல் ரிஸ்வி கூறுகையில், ”முகம்மது ஷாஜியாப் ஹசன் கானுக்கான தடை முடிவுக்கு வந்தால், அவரால் சர்வதேசப் போட்டிகளில் விளையாட முடியாது, உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும். சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவது குறித்து வாரியம்தான் முடிவு எடுக்கும். ஆனால், இந்த தண்டனை மற்ற வீரர்களுக்கு உதாரணமாக அமையும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் முகம்மது இர்பான், முகம்மது நவாஸ் ஆகியோரும், நசீர் ஜாம்ஷெட் ஆகியோரும் குறுகிய காலத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

1 hour ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

7 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

7 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

7 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

7 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

8 hours ago