ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தற்போது திகார் சிறையில் சிபிஐ விசாரணையில் உள்ளார். அவர் கடந்த 5ம் தேதி முதல் திகார் சிறையில் விசாரணைக் உட்படுத்தப்பட்டுள்ளார்.
இன்னும் 8 நாட்கள் அவர் திகார் சிறையில் இருக்க வேண்டி உள்ளது. இந்நிலையில் தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு கொடுத்துள்ளார். கடந்த 5 நாட்களாக டெல்லி உயர் நீதிமன்றம் தொடர் அரசு விடுமுறை என்பதால் இன்று அந்த ஜாமீன் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில் ப.சிதம்பரம் தரப்பில், ‘தான் சிபிஐ அழைத்த அனைத்து விசாரணைக்கும் முறையாக ஆஜராகி உள்ளேன். சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். மேலும், பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இரண்டு வருடங்களுக்கு முன்பு வழக்காக தொடர்ந்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்து, தற்போது இந்த விசாரணை நடத்தபடுவது உள்நோக்கம் கொண்டது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்ஜாமீன் வழக்கு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…