அடுத்த 48 மணி நேரத்தில்… 7 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 48மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், காரைக்கால், புதுச்சேரி, ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் உட்பட்ட சில பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.