Oscars 2024: சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான (அகாடமி விருது) ஆஸ்கர் விருதினை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான (2024) ஆஸ்கர் வழங்கும் விழா, மார்ச் 10 ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது.
உலகளவில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான இந்த விழாவை, ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார். ஜிம்மி கிம்மல் நான்காவது முறையாக இந்த அகாடமி விருதுகளை தொகுத்து வழங்குகிறார்.
அவர் இதற்கு முன்பு, 2017, 2018 மற்றும் 2023 -ல் நடைபெற்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. 96வது ஆஸ்கர் விருது அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருதுகளில் தேர்வாகியுள்ள நடிகர்கள், படங்கள் குறித்த பரிந்துரைகள் கடந்து மாதம் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்கா நேரப்படி, நாளை (மார்ச் 10-ம் தேதி) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. அதே இந்தியாவில், நாளை மறுநாள் (மார்ச் 11-ம் தேதி) அதிகாலை 5:30 முதல் தொடங்கி நடைபெறவிருக்கும் இந்த விருது விழாவின் நேரடி ஒளிபரப்பை இந்தியாவில் உள்ள பார்வையாளர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மூலமாக நேரடியாக பார்க்கலாம்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில், சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் உட்பட 13 பரிந்துரைகளுடன் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம் முன்னணியில் உள்ளது. பரிந்துரைக்கப்பட்ட பிற படங்களில் பார்பி, புவர் திங்ஸ் மற்றும் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் ஆகியவை உள்ளது.
சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார். கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,…
சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…
சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…