Election2024 : இன்று வேட்புமனுத்தாக்கல் செய்த போது எதிரெதிர் கட்சி வேட்பாளர்கள் சிலர் தங்கள் அன்பை சக வேட்பாளர்களிடம் வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதி மார்ச் 27 என்பதாலும், இன்று பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதாலும் வேட்புமனு தாக்கல் நிகழ்வு இன்று வெகு தீவிரமாக நடைபெற்றது. இதனால் பல்வேறு கட்சியினர் ஒரே நேரத்தில் அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகம் சென்றதால் வடசென்னை, நீலகிரி போன்ற பல்வேறு இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது.
அதே நேரத்தில் மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் ஒரே இடத்தில் சந்தித்து கொண்டு, தங்கள் அன்பை பரிமாறிக்கொண்ட நிகழ்வுகளும் நடைபெற்றன. குறிப்பாக தென் சென்னையில், திமுக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனும் , பாஜக சார்பில் போட்டியிட வந்த தமிழிசை சவுந்தராஜனும் நேருக்கு நேர் சந்தித்து கொண்ண்டனர். அப்போது இருவருமே ஒருவரை ஒருவர் அரவணைத்து நலம் விசாரித்து கொண்டனர்.
அடுத்ததாக, விருதுநகரில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் வேட்புமனு தாக்கல் செய்ய விருதுநகர் அலுவலகம் சென்று இருந்தார். அப்போது, பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் , பாஜக உறுப்பினர் சரத்குமார் ஆகியோர் வந்திருந்தார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சரத்குமார் சந்தித்து நலம் விசாரித்தார். அடுத்து, விஜய பிரபாகரை பார்த்து சரத்குமார் நலம் விசாரித்து தோளில் தட்டிக்கொடுத்து வாழ்த்தினார்.
எதிரெதிர் கட்சியினர் ஒரே இடத்தில் சந்தித்து கொண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…