மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகியை விடுவிக்குமாறும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த போராட்டத்தை முடக்கும் விதமாக நள்ளிரவில் நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் குற்றம் சாட்டி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை மியான்மர் ராணுவம் கைப்பற்றியதுடன், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் அண்மையில் திடீரென நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். பின் மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஒரு வருடத்திற்கு இராணுவ ஆட்சி தான் நடத்தப்படும் எனவும், அதன் பின் தேர்தல் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர் கையில் அதிகாரம் கொடுக்கப்படும் எனவும் ராணுவத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆங் சான் சூகியை விடுவிக்கக்கோரி போராட்டம் நடத்துபவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இராணுவத்தினர் உத்தரவிட்டுள்ள நிலையில், மியான்மரின் முக்கியமான சில நகரங்களின் வீதிகளில் மக்கள் போராட்டத்தில் கடந்த சில நாட்களாகவே ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளும், ஐநாவும் மியான்மரில் நடக்கும் இராணுவ ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் செய்யக்கூடிய பொது மக்களை ஒடுக்கும் விதமாக மியான்மரின் பல நகரங்களில் ஆயுதமேந்திய ராணுவத்தினரின் போர் வாகனங்களில் உலா வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மியான்மர் மக்களின் போராட்டத்தை குலைக்கும் விதமாக நாடு முழுவதிலும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு ஒரு மணி முதல் காலை 9 மணி வரையிலும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட வேண்டும் என தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…