விடுதலை படப்பிடிப்பில் ஒருவர் பலி.! ரோப் அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழப்பு.!

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை, கேளம்பாக்கத்தில் இந்த திரைப்படத்தின்  படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர்  சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment