8-ம் தேதி முதல் கோவை உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு.!

ஜூன்-8ம் தேதி முதல் உணவகங்கள் திறப்பதால் நேற்று ( SOPs) மத்திய அரசு ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்நிலையில் கோவை மாவட்டத்தில் ஹோட்டல் மற்றும் உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன்-8ம் தேதி முதல் உணவகங்கள்  திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் ஹோட்டல் மற்றும் உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

  • உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
  • எல்லா உணவகங்களிலும் குளிர்சாதன வசதியை இயக்க கூடாது.
  • வாடிக்கையாளர்கள் சானிடேசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் உணவகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.
  • உணவகத்திற்கு உள் உள்ள இருக்கைகளில் இரண்டு நபர்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதிக்க வேண்டும்.
  • உணவகங்களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள பொருட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
  • மாநகராட்சியால் கொடுக்கப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் அந்த உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .
  • அணைத்து உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.
  • உணவு விநியோக ஊழியர்கள் உணவு பார்சலை நேரடியாக மக்களுக்கு கொடுக்காமல் அதற்கு பதிலாக வாடிக்கையாளரின் அறை வாசலில் வைக்க வேண்டும்.
author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.