டெல்லி திகார் சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனைக்கு பயந்து, செல்போனை விழுங்கிய கைதி.
டெல்லி திகார் சிறையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள கைதிகள் மொபைல் போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை உபயோகப்படுத்துகின்றார்களா என சோதனை செய்வது வழக்கம்.
அந்த வகையில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது திகார் சிறையில் எண்.1-ல் இருந்த கைதியிடம் சிறிய ரக செல்போன் ஒன்று இருந்துள்ளது. அதிகாரிகள் சோதனை செய்து விடுவார்கள் என்ற பயத்தில் அந்த கைதி மொபைல்போனை சிறை அதிகாரிகள் மற்றும் பிற கைதிகள் முன்னிலையிலேயே அந்த போனை விழுங்கியுள்ளார்.
அதன் பின்பு அவரது நிலைமை மோசமடைய சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின் கூடுதல் சிகிச்சைக்காக தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து மத்திய சிறையின் இயக்குனர் சந்தீப் கோயல் கூறுகையில், செல்போனை விழுங்கிய கைதியின் நிலைமை முன்னேறி உள்ளது. மொபைல் போன் கைதியின் வயிற்றில் தான் உள்ளது. அது தானாகவே வருவதற்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொள்கின்றன. அப்படி வராத பட்சத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…