இப்போது மக்களுக்கு தேவை உங்கள் அறிவுரை அல்ல, நிவாரணம் தான் என பிரதமர் உரை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று மக்களுக்கு உரையாற்றுவதாக கூறியதும் ,மக்கள் நிவாரண உதவிகளை பிரதமர் மக்களுக்கு அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்தனர். ஏனென்றால் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்திருப்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதுடன், வேலை இல்லாத் திண்டாட்டம் ,பொருளாதார வீழ்ச்சி மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை ஏற்றம் என மக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகி கொண்டிருக்கின்றனர்.
ஆனால், திருவிழாக் காலம் வந்துவிட்டதால் முக கவசம் அணியாமல் யாரும் வெளியே செல்லாதீர்கள் என பிரதமர் அறிவுரை கூறியது பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாகவும் மக்கள் மத்தியில் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள், இக்கட்டான இந்த காலகட்டத்தில் பிரதமர் வாய்ப் பேச்சால் மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் மக்களுக்கு தேவையான உருப்படியான நலத்திட்டங்களை அறிவிப்பதற்கு முன் வர வேண்டும் என கூறியுள்ளார். மேலும் தற்பொழுது மக்களுக்கு தேவை உங்கள் அறிவுரை அல்ல; நிவாரணம் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…