தொடங்கியது வடகிழக்கு பருவமழை..! 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது – மேலும் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அந்த வகையில் விருதுநகர், நெல்லை, தென்காசி , ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் கூறுகையில், இன்று அக்டோபர் 28ம் தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகி வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் துவங்கியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது அதிகபட்சமாக மதுரை மாவட்டம் வேலூரில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் அடுத்து வரும் இரண்டு தினங்களில் பொருத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும். நெல்லை விருதுநகர், தென்காசி, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.