அபுதாபிக்கு செல்லக்கூடிய பயணிகள் தடுப்பூசி போட்டு இருந்தாலும், போடாவிட்டாலும் 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் போதும் என அபுதாபி அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனா பரவல் அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து வரக்கூடிய மக்களுக்கு சில நாடுகள் தடை விதித்துள்ளது. மேலும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு சில நாடுகள் அனுமதித்தாலும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கூட சில நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்து கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று சான்றளிக்கப்பட்ட பின்பு தான் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், அபுதாபிக்கு செல்லக்கூடிய சர்வதேச பயணிகள் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களாக இருந்தாலும், தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியமில்லை என அபுதாபி அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அபுதாபி விமானத்தில் ஏறுவதற்கு முன்பதாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பயணிகளாக இருந்தாலும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத பயணிகளாக இருந்தாலும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா எதிர்மறை சோதனை முடிவை வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…