10ம் தேதி புதிய படங்கள் வெளியாகும்போது கட்டுப்பாடுகள் வேண்டாம் – கடம்பூர் ராஜூ

வருகின்ற, 10ம் தேதி புதிய படங்கள் வெளியாகும்போது கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி,  திரையரங்குகளில் 50 சதவிதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி வரும் நவம்பர் 10ம் தேதி முதல்செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், வரும் 10ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட வேண்டும் என்றும் தியேட்டர்களுக்கு பட தயாரிப்பாளர்கள் கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளை திறக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், விபிஎப் கட்டண விவகாரத்தை உடனே பேசி தீர்வு காண முடியாது. இதனால், புதிய படங்களை வெளியிட்டபிறகு வி.பி.எப். கட்டணம் விதிப்பது பற்றி பேசுவது சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.