இனி இமாச்சலத்திற்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை.!

இனி இமாச்சலத்திற்குள் நுழைய இப்போது இ-பாஸ் தேவையில்லை என மாநில அரசு அறிவித்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் நுழையும் மக்களுக்கு இனி ஆன்லைன் பதிவு தேவையில்லை என்று மாநில அரசு நேற்று முடிவு செய்துள்ளது. இந்நிலையில், அடுத்த உத்தரவு வரும் வரை மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளின் இயக்கம் இடைநிறுத்தப்படும் என்று  மாநில அமைச்சர் கூறினார்.

முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சரவைக் கூட்டத்தில் மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து ஏதும் பேசவில்லை என்றும்  தெரிவித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.