எனது வீட்டில் சோதனை நடைபெறவில்லை. எனது சகோதரர் வீட்டில் தான் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது. – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்பந்தப்பட்டவர்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் என பல்வேறு நபர்களின் வீடுகளின் நடைபெற்று வருகிறது.
முதலில் சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகளிலும் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் கரூரில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினரை சோதனை செய்ய அனுமதிக்காமல் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் அந்த குறிப்பிட்ட சில பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
அதே வேளையில், சென்னை தலைமை செயலகத்தில், டாஸ்மாக் பிரிவு அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது அந்த ஆலோசனை கூட்டத்தில் செய்தியாளர்கள் வருமானவரித்துறை சோதனை பற்றி கேட்டுள்ளனர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, எனது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறவில்லை. கரூரில் உள்ள வீடு , சென்னையில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெறவில்லை. எனது சகோதரர் (அசோக்) வீட்டிலும், அவருக்கு தெரிந்தவர்கள் வீடுகளிலும் தான் சோதனை நடைபெறுகிறது எனவும், வருமான வரித்துறை சோதனை முழுதாக நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து முழு விளக்கம் அளிப்பதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…