NLC அனல்மின் நிலைய தீ விபத்து.. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 அக உயர்வு!

NLC அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.

நெய்வேலி NLC அனல் மின் நிலையத்தில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், தற்பொழுது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும், இந்த விபத்து காரணமாக, இதுவரைக்கும் 17 பேர் என்எல்சி பொது மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.