இந்திய முறைபடி திருமணம் செய்ய இந்தியா வந்த நியூசிலாந்தைச் சேர்ந்த 49 வயது பெண் ஒருவர் நேற்று காலை டெல்லியில் உள்ள பஹர்கஞ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இறந்து கிடந்தார் என போலீசார் தெரிவித்தனர்.
இறந்தவர் துயாலி பாலி அன்னே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவர் பிளட் பிரஷர் நோயாளியாக இருந்ததாகவும், ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த தனது காதலனுடன் இந்தியா வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
நேற்று காலை துயாலி பாலி மயக்க நிலையில் இருப்பதை பார்த்த காதலன் ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார் .பின்னர் அந்த பெண்ணை லேடி ஹார்டிங்கே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
அந்த பெண் பிளட் பிரஷர் நோயாளியாக இருந்ததால், அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாகத் தெரிகிறது. மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் இறப்புக்கான சரியான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தெரியும் என கூறினார்.
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…