தமிழக கோயில்கள் தொடர்பாக மக்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க புதிய திட்டம் – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள கோயில்கள் தொடர்பாக மக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க புதிய இணையவழி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள்,தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கும் வகையில் புதிய இணையவழி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,அதில்,”இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள்,மனைகள் மற்றும் கட்டிடங்கள் அதிக அளவில் உள்ளன.இதனால், அவற்றின் வாடகைத் தொகை,குத்தகைத் தொகை மற்றும் குத்தகை நீட்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக,பொதுமக்களிடமிருந்து இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார்கள் வருகின்றன.

இதன்காரணமாக,தமிழக முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி,திருக்கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள்,தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கும் வகையில் ‘கோரிக்கைகளைப் பதிவிடுக’ என்ற  புதிய திட்டம் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளமான https://hrce.tn.gov.in//hrcehome/index.php இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே,கோரிக்கைகளைப் பதிவு செய்ய விரும்புவோர் தங்களது தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும்.கோரிக்கைகளை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.கோரிக்கைகளைப் பதிவு செய்த பின்னர்,தங்களது தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு ஓர் ஒப்புகை அட்டையுடன் பதிவெண் அனுப்பப்படும்.

கோரிக்கைகளின் மீதான நடவடிக்கைகள் இந்துசமய அறநிலையத்துறை ஆணையரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும்.அதுமட்டுமன்றி, கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் என்னால் விரிவாக ஆய்வு செய்யப்படும்.

சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள்,ஒப்புகை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு எண்ணை உள்ளீடு செய்து கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த திட்டத்தினை நன்கு பயன்படுத்தி துறை மற்றும் திருக்கோயில்கள் செயல்பாட்டினை மேம்படுத்திட உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா.. காரணம் என்ன?

China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக…

14 mins ago

மீண்டும் ஏகிறியது தங்கம் விலை…சவரன் ரூ.360 உயர்வு.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…

32 mins ago

கில்லி படத்தில் ரஜினியை பார்த்து தான் விஜய் நடிச்சாரு! இயக்குனர் தரணி சொன்ன சீக்ரெட்!

Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல…

45 mins ago

இந்தியாவில் நடைபெற வாய்ப்பு அதிகம் !! இந்திய செஸ் சம்மேளனம் தகவல் !!

Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே…

48 mins ago

இந்த வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்.. டூ பிளெசிஸ் பெரும் மூச்சு!

IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி…

1 hour ago

‘ஆக்ரோஷமான ஆட்டம் எந்த வகையிலும் குறையாது’ – டேனியல் வெட்டோரி

Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…

2 hours ago