#Breaking:ஓய்வு பெரும் அரசு அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு – ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவு..!

அரசு அதிகாரிகள்,ஓய்வு பெற்றவுடனே தனியார்துறைகளின் கீழ் உள்ள வேலைகளில் சேரக்கூடாது என்றும் குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும் என்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மத்திய அரசு துறைகளின் செயலாளர்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு,ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதாவது,
  • ஓய்வு பெற்ற பிறகு தனியார் வேலையில் சேருவதற்கு ஒவ்வொரு அரசுத்துறையும் குறிப்பிட்ட கால இடைவெளியை நிர்ணயித்துள்ளன.
  • இந்நிலையில்,அந்த கால இடைவெளியை பின்பற்றாமல்,அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடனே அதிகாரிகள் சிலர்,தனியார் நிறுவனங்களில் முழு நேர பணி அல்லது ஒப்பந்த முறையில் பணிக்கு சேருகின்றனர். எனவே,அவ்வாறு தனியார் துறைகளில் வேலையில் சேருவது தவறான நடத்தை ஆகும்.
  • எனவே, ஓய்வு பெற்ற பிறகு தனியார் பணியில் சேருவதற்கு முன்பு குறிப்பிட்ட கால இடைவெளியை கட்டாயமாக பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசுத்துறைகளும் உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
  • அப்படி தனியார் பணியில் சேருவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஊழல் வழக்கு இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பதை உறுதிப்படுத்த தடையில்லா சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும்.அதன்படி,அந்த சான்றிதழ் இருந்தால்தான்,அவரை பணியில் சேர்க்க வேண்டும்.
  • இந்த விதிமுறைகளை மீறி,தனியார் பணியில் உடனடியாக சேரும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விதிமுறையில் சில உட்பிரிவை சேர்க்க வேண்டும்.
  • ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு பணி வழங்கும் நடைமுறை எந்தவிதமான ஒளிவுமறைவின்றி இருக்க வேண்டும்.
  • மேலும்,அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில், வேலைவாய்ப்பு குறித்து விளம்பரப்படுத்த வேண்டும், என்று ஆணையம் கூறியுள்ளது.

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

2 hours ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

3 hours ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

3 hours ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

3 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

4 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

4 hours ago