கேரளாவை சேர்ந்த , பிடெக் முதலாமாண்டு மாணவர் மைக் மற்றும் ஸ்பீக்கர் இணைக்கப்பட்ட முகமூடி ஒன்றை வடிவமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், மனிதனை இந்த வைரஸில் இருந்து பாதுகாக்க கூடிய முக்கியமான ஒரு கவசமாக தான் முக கவசம் திகழ்கிறது. முக கவசங்கள் மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியுள்ள நிலையில், திருச்சூர் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த முதலாம் ஆண்டு பிடெக் மாணவர் புதிய வகை மாஸ்க் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
கேவின் என்ற மாணவர் ஒரு மருத்துவரின் மகன் ஆவார். தனது பெற்றோர் நோயாளிகளுடன் தொடர்பு கொள்வதில் சிரமப்படுவதை கவனித்த அவர், மைக் மற்றும் ஸ்பீக்கர் இணைக்கப்பட்ட முகமூடி ஒன்றை வடிவமைத்துள்ளார்.தான் வடிவமைத்த முகமூடியை முதலில் தனது பெற்றோர்களான டாக்டர் செனோஜ் கே.சி மற்றும் டாக்டர் ஜோதி மேரி ஜோஸ் ஆகியோரிடம் சோதித்தார். அதனை தொடர்ந்து அதன் தேவை அதிகரித்ததை அடுத்து மேலும் அதிகமான முகமூடிகளை உற்பத்தி செய்யத் தொடங்கினார்.
இந்த முகமூடியை 30 நிமிடம் சார்ட் செய்தபின் 4 முதல் 6 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். இது ஒரு காந்தத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள முகமூடி ஆகும். இந்த முகமூடியை பயன்படுத்தும் போது நோயாளிகளிடம் மருத்துவர்கள் பேசுவதற்கான சிரமம் தவிர்க்கபடுவதாகவும், இது குறித்து மற்றவர்களிடம் நல்ல கருத்துக்கள் தான் வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் கூறுகையில், இது போன்ற 50-க்கும் மேற்பட்ட முகமூடிகளை தென்னிந்தியாவில் மருத்துவர்கள் பயன்படுத்துவதாகவும், இந்த சாதனங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான மூலதனமும், உபகரணங்களும் என்னிடம் இல்லை. ஆனால் ஒரு பெரிய நிறுவனம் இந்த சிறிய உதவியை செய்ய எனக்கு தயாராக இருந்தால், இது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
M.G.Ramachandran : என்னுடைய முகத்தை 2 மணி நேரம் யார் பார்ப்பார்கள் என எம்.ஜி.ஆர் கோபப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எம் ஜி…
NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு…
Watermelon milk shake- தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி நம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை…
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள்,…
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…