நீரஜ் சோப்ராவுக்கு உடல்நலக்குறைவு..!

ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய நாட்டிற்கு தங்கப்பதக்கம் பெற்று கொடுத்து பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. வரலாற்று சாதனை படைத்த தங்க மகன் ஒலிம்பிக் போட்டி முடிந்து கடந்த திங்கள் கிழமை அன்று நாடு திரும்பினார். இந்திய நாட்டிற்கு திரும்பிய பிறகு பல்வேறு பாராட்டு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வந்தார்.

திடீரென கடந்த இரண்டு நாட்களாக இவருக்கு பயங்கர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவருக்கு 103 டிகிரி காய்ச்சல் அடித்து பின்னர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளார். மேலும், இவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் இவருக்கு நெகட்டிவ் என்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.